&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Sunday 31 July 2011

உயிரற்ற மரமாய் நான்

என் மனச்சிப்பிக்குள்
கண்ணீர் முத்துக்களை
அறிமுகம் செய்தவனே..

அன்று என் மனமேடையில்
அழைப்புக்கள் எதுவுமின்றியே
உன் காதலை அழகாய்
அரங்கேற்றிச்சென்றுவிட்டு...

இன்று என் மனக்கிளையிலிருந்து
விவாகரத்துப்பெற்ற இலையாய் -நீ
நானோ உயிர்ப்பை தொலைத்த
உயிரற்ற மரமாய் உன் எதிரில்....(தனா)

No comments:

Post a Comment