&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Wednesday 13 April 2011

என்னுள் மலர்ந்த உணர்வு

என்னுள் மலர்ந்த உணர்வே
ஏன் தான் என்னை வதைக்கிறாய்
உணவு கூட மறக்கிறது
உறக்கம் எங்கோ தொலைகிறது
உறவுகள் கேலி செய்கையிலும்
உள்ளம் ஏனோ சிரிக்கிறது
விழிகள் மூடாது துடிக்கிறது
விரல்கள் வரைய மறுக்கிறது
எழுத்துக்கள் இல்லாத தாள் கூட
ஏதேதோ கருத்து சொல்கிறது
கண்ணில் காணும் பூக்கள் எல்லாம்
அசைந்து கள்ளத்தனமாய் சிரிக்கிறது
எண்ணங்கள் எங்கெங்கோ செல்கிறது
எதிலும் நிலைத்து நிற்காமல்
எனக்குள் ஏன் இந்த தடுமாற்றம்
என்றுமே இல்லாத நிகழ்வாக..(தனா)

2 comments:

  1. கண்ணில் காணும் பூக்கள் எல்லாம்
    அசைந்து கள்ளத்தனமாய் சிரிக்கிறது
    எண்ணங்கள் எங்கெங்கோ செல்கிறது
    nice lines

    ReplyDelete