என்னுள் மலர்ந்த உணர்வே
ஏன் தான் என்னை வதைக்கிறாய்
உணவு கூட மறக்கிறது
உறக்கம் எங்கோ தொலைகிறது
உறவுகள் கேலி செய்கையிலும்
உள்ளம் ஏனோ சிரிக்கிறது
விழிகள் மூடாது துடிக்கிறது
விரல்கள் வரைய மறுக்கிறது
எழுத்துக்கள் இல்லாத தாள் கூட
ஏதேதோ கருத்து சொல்கிறது
கண்ணில் காணும் பூக்கள் எல்லாம்
அசைந்து கள்ளத்தனமாய் சிரிக்கிறது
எண்ணங்கள் எங்கெங்கோ செல்கிறது
எதிலும் நிலைத்து நிற்காமல்
எனக்குள் ஏன் இந்த தடுமாற்றம்
என்றுமே இல்லாத நிகழ்வாக..(தனா)
ஏன் தான் என்னை வதைக்கிறாய்
உணவு கூட மறக்கிறது
உறக்கம் எங்கோ தொலைகிறது
உறவுகள் கேலி செய்கையிலும்
உள்ளம் ஏனோ சிரிக்கிறது
விழிகள் மூடாது துடிக்கிறது
விரல்கள் வரைய மறுக்கிறது
எழுத்துக்கள் இல்லாத தாள் கூட
ஏதேதோ கருத்து சொல்கிறது
கண்ணில் காணும் பூக்கள் எல்லாம்
அசைந்து கள்ளத்தனமாய் சிரிக்கிறது
எண்ணங்கள் எங்கெங்கோ செல்கிறது
எதிலும் நிலைத்து நிற்காமல்
எனக்குள் ஏன் இந்த தடுமாற்றம்
என்றுமே இல்லாத நிகழ்வாக..(தனா)
கண்ணில் காணும் பூக்கள் எல்லாம்
ReplyDeleteஅசைந்து கள்ளத்தனமாய் சிரிக்கிறது
எண்ணங்கள் எங்கெங்கோ செல்கிறது
nice lines
அருமை
ReplyDelete