அன்பே உன்னைப் பார்த்ததும் பேசவென
ஓராயிரம் வார்த்தைகளை என் உதடுகள்
ஒத்திகை பார்த்தபோதிலும் நீ வந்த நொடியில்
என் உதடுகள் ஊமையாகிக்கொண்டன
நான் பேசுவேன் என நீ காத்திருந்தாய்
நீ பேசுவாய் என நான் காத்திருந்தேன்
கடைசியில் சிலநிமிடங்கள் கரைந்துபோன பின்
நீ விடைபெற்று செல்ல நான் சிலைபோல்
விழி மூடாது உன் நினைவோடு வீடு வந்தேன்
என் விழிகள் சேமித்த உன் விம்பங்கள்
மூடும் என கண்மடல்களுக்குள்
மூழ்கி விடக்கூடும் என பயந்து ........(தனா)
வணக்கம். உங்கள் கவிப் புலமை பிரமாதம். உங்கள் வலைப் பூ பயணத்தில் இன்னும் பல கவிதைகள் புனைய இதயத்தால் இனிய வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி தோழரே........
ReplyDelete