&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Tuesday, 23 August 2011

ஜனனத்துளிரான உன் நினைவு

அன்பே !
உன் வரவை அறிந்த நொடி முதல்
விழிகள் இரண்டும் இமைக்க
மறுத்து விடுமுறை கேட்டபடி
நீ வரும் பாதையில்
பார்வைப் பூக்களைத் தூவி
மலர்ப்பாதை அமைத்து
காத்திருக்கின்றவேளையில்
என் மனம் யாசிக்கின்றது உன்னிடம்
ஜனனத்துளிராய் துளிர்த்த
உன் நினைவுகளுக்கு உந்தன்
பார்வை எனும் நீரூற்றி என் மனதை
பசுமை வயலாய் மாற்றிவிடு என....(தனா)

No comments:

Post a Comment