&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Tuesday 23 August 2011

நிலவான உன் நினைவு

என் அனுமதி இன்றியே எனைத்தேடி வந்து
உன்னை எனக்கு அழகாய்
அறிமுகம் செய்துவைத்தாய்
சிலையாய் இருந்த என் மனதுக்குள்
சிறு உயிர்ப்பை கொடுத்தாய்
உன் புன்னகை சாரல் தெளித்து
அலையலையாய் நீ சொன்ன
வார்த்தை கேட்டு எனக்குள்
மலையாய் தோன்றிய கவலைகள்
மடுவாய் என் முன் காட்சியளிக்க
என் மனம் செடியாகி மலரத்தொடங்கியது
மணம் வீசும் மல்லிகைப்பூவை பிரசவித்து
நிலவான உன் நினைவை சுமந்தபடியே....(தனா)

No comments:

Post a Comment