
என் இதயத்தில் தீபமாக
ஏற்றிவைத்த உன்காதலை
தீவைத்துவிட்டுச் சென்றவனே....
திரும்ப வந்து கேட்கிறாயே
என் காதலை
அதை நீ காகிதத்திலா
எழுதிச்சென்றாய்- திருப்பி தருவதற்கு
என் கண்ணீரில் அல்லவா
எழுதிச்சென்றாய்......
என் காதல் உண்மையா என்று
என்னிடம் கேட்காதே
இன்னொருத்தியுடன்
கைகோர்த்துச் சென்ற
உன் விரல்களிடம்- கேள்
அது சொல்லும் என் காதல்....

கடைசிவரை உன் நிழலாய்
தொடர்வேன் என்று என்னிடம்
கூறிவிட்டு ...வேரொருத்தியுடன்
கடற்கரை மணலில் தடம்பதித்த
உன் கால்களிடம்-கேள்
அது சொல்லும் என் காதல்....
நான் தூங்கிய தொட்டிலில்
வேரொருத்தியை தூங்கவைத்து
தாலாட்டுப் பாடிய
உன் இதயத்திடம்- கேள்
அது சொல்லும் என்காதல்....
என் மனதில் ஈட்டியை
சொருகிவிட்டு
இன்னொருத்திக்கு
மலர் அம்பு வீசிய
உன் மனதைக்- கேள்
அது சொல்லும் என்காதல்
இப்படியான ஊனம் நிறைந்த
உன் உள்ளத்தில்
உண்மையான என் காதல் -இனி
ஒருபோதும் உறங்காது...(தனா).
No comments:
Post a Comment