தொலைதூரம் இருந்தபோதும்
அழையா விருந்தாளியாய்
அவன் மனதில் நானும்
என்மனதில் அவனும் குடியேறிக்கொண்டோம்
பரிமாறிக்கொள்வதற்காய் நமக்குள்
உணர்வுகள் உருவாகிக்கொண்டன..
கறைபடியா அவன் உள்ளம்
கவர்ந்திழுக்கும் கண்கள்
தொடத்துடிக்கும் விரல்கள்
தொடாமலே தரும் முத்தம்
இன்னும் பல நினைவுகள்
அசைபோட்டுக்கொண்டன
அவன்வரவை அறிந்தபோது
புள்ளிமானாய் துள்ளியோடினேன்
அவனைநோக்கி...அங்கே எனக்கு
புதுமான் ஒன்றை அறிமுகம் செய்துவைத்தான்
இவள்என் மனைவியென்று......(தனா)
அழையா விருந்தாளியாய்
அவன் மனதில் நானும்
என்மனதில் அவனும் குடியேறிக்கொண்டோம்
பரிமாறிக்கொள்வதற்காய் நமக்குள்
உணர்வுகள் உருவாகிக்கொண்டன..
கறைபடியா அவன் உள்ளம்
கவர்ந்திழுக்கும் கண்கள்
தொடத்துடிக்கும் விரல்கள்
தொடாமலே தரும் முத்தம்
இன்னும் பல நினைவுகள்
அசைபோட்டுக்கொண்டன
அவன்வரவை அறிந்தபோது
புள்ளிமானாய் துள்ளியோடினேன்
அவனைநோக்கி...அங்கே எனக்கு
புதுமான் ஒன்றை அறிமுகம் செய்துவைத்தான்
இவள்என் மனைவியென்று......(தனா)
No comments:
Post a Comment