&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Sunday 27 March 2011

நகைச்சுவை

படித்ததில் பிடித்த நகைச்சுவை

எதை நீ படித்தாய் மறப்பதற்கு;
எதை நீ கவனித்தாய் அது புரியாமல் இருப்பதற்கு;
என்று நீ காலேஜ் ஒழுங்காக வந்தாய்
அட்டண்டென்ஸ் சார்ட்டேஜ் அடிக்காமல் இருப்பதற்கு;
எந்த பிகர் இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவராகிறது
மற்றொரு நாள் அது வேறொருவராகிவிடும்...

*************************************************************************************

நோயாளி:காதில ஏதோ ரயில் ஓடுற மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்..
டாக்டர்: செக் பண்ணினேன் அது எல்லாம் ஒன்னும் இல்லையே..
நோயாளி:ஒரு வேளை ஏதாவது ஸ்டேஷன்ல நின்றிருக்குமோ?
டாக்டர்:???

*************************************************************************************

சர்தார் புதுசா ஒரு வண்ணத் தொலைக்காட்சி வாங்கினார்.
வீட்டிற்கு வந்தவுடனே அதை தண்ணிரில் போட்டார்..
ஏன் தெரியுமா..?
வண்ணம் போகுமா என்று பார்க்கத்தான்..

*************************************************************************************

என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும்
நமக்கு நாமே போன் பண்ணும் போது பிஸியா தான் இருப்போம்

*************************************************************************************

ஒருவர்:எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,
மற்றொருவர்: ஏன்?
ஒருவர்:கீதையில சொல்லியிருக்கே'எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது'அதான்..

*************************************************************************************

என் மனைவி அருவி மாதிரி
ஏன்டா?
அவ!எந்த நேரமும் கொட்டிக்கிட்டே(சாப்பிட்டிக்கிட்டே) இருப்பா..

*************************************************************************************

என் கணவரை சந்தோஷப்படுத்துறதுதான் என் நோக்கமே!
நிஜமாக சொல்ற?
பின்னே..இன்னிக்கு காலையில கூட
சாம்பார் ரொம்ப அருமையாக இருக்கு..என்று
சொல்லி அவரை சந்தோஷப்படுத்தினே..

*************************************************************************************

ஜலதோஷம் தாங்க முடியலை டாக்டர்
அதுக்கு எதுக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தீங்க?
ஆவி பிடிக்கலாமேன்னு தான்

*************************************************************************************

டாக்டர்:மீன் முட்டை சாப்பிடுவதை நீங்க உடனே நிறுத்திடனும்..
நோயாளி:மீன் முட்டையை நான் கண்ணால் கூட பார்த்ததில்லை டாக்டர்..
டாக்டர்:????

*************************************************************************************

டாக்டர்:நான் கொடுத்த தூக்க மாத்திரை நன்றாக வேலை செய்யுதா?
நோயாளி:தெரியலை டாக்டர்! மாத்திரை சாப்பிட்ட உடனே நான் நல்லா தூங்கிட்டேன்..

*************************************************************************************

ஒருவர்:என்னப்பா..உன் மகன் சிகரெட் அடிக்கிறானே..அவனை தட்டி கேட்க மாட்டியா..
மற்றொருவர்:கேட்டேன்..தர மாட்டேங்கிறான்..

*************************************************************************************

மனைவி:ஒரு மணி நேரமா எதையோ தேடிக்கிட்டு இருக்கிங்களே..பேசாம கண்ணாடி போட்டு தேட வேண்டியதுதானா..
கணவர்: அதைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்..

*************************************************************************************

மகன்:அப்பா..நானும் அம்மாவும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறோம்.நான் எங்கு ஒளிந்து கொள்ள.
அப்பா:சமையலறையில் ஒளிஞ்சுக்க...உங்க அம்மா அங்க வரமாட்டா..

*************************************************************************************

அப்பா:உன் வயசுல அப்துல் கலாம் ரொம்ப படிச்சாரு தெரியுமா?
மகன்:அவர் உஙக் வயசில ஜனாதிபதியாக இருக்கார்..நீங்களும் இருக்கீங்களே..

*************************************************************************************

மனைவி:எதிர்வீட்டுக்காரன் மனைவி எங்கேயோ ஓடிப்போயிட்டாலாம்..
கணவன்:அவன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கும்..
மனைவி:...???

*************************************************************************************

அசின்:-பதிவை படிக்கிற பையன் பாரேன்டி..
சிம்ரன்:- சூப்பரா இருக்கான்டி..
சினேகா:-அவன் என்னை பார்க்கத்தான் வருகிறான்..
நமிதா:-முதல்ல அவன் என் ஆளு தெரிஞ்சுக்கோங்க..
பாவனா:-அவன் என் மாமா பையன் தெரியுமா?..
பறவை முனியம்மா:-அடி சிறுக்கிங்களா,,அவன் என் புருஷன்டீ..
(சும்மா தமாசு..)

*************************************************************************************

ராமு:-டேய்,நாளைக்கு நான் சினிமாவுக்கு போரேன்..வர்ரியா?
சோமு:-முடிஞ்சா வரேன்டா..
ராமு:-முடிஞ்ச பிறகு ஏன்டா வர்ர..படம் ஆரம்பிக்கும் போதே வந்துவிடு..

*************************************************************************************

ஆசிரியர்:-மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மாணவன்:-மணலுக்கு சொரிந்து விட்டு நைசில் பவுடர் போட வேண்டும்..

*************************************************************************************

ஆசிரியர்:-'சூரியன் மேற்கே மறையும்'இது நிகழ்காலமா,எதிர்காலமா,கடந்தகாலமா?
மாணவன்:-அது 'சாயங்காலம்'
ஆசிரியர்:-????

*************************************************************************************

காற்றில் அவள் துப்பட்டா பறந்து வந்து என் மீது விழுந்தது..
எனக்கு பயங்கர சந்தோசம்..
சைக்கிள் துடைக்க துணி கிடைத்து விட்டது என்று..

*************************************************************************************

பசங்க மனசு மொபைல் மாதிரி..
பொண்ணுங்க மனசு தண்ணீர் மாதிரி..
தண்ணீர்ல மொபைல் விழுந்தாலும் மொபைல்ல தண்ணீத் விழ்ந்தாலும் ஆபத்து மொபைலுக்குத்தான்..

*************************************************************************************

காதலன்:-அன்பே..நான் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவுதான்!..
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்.

*************************************************************************************

ராமு:-பஸ் ஸ்டாப்ல நின்னு மேலையே பார்த்து கிட்டு இருக்கீங்களே என்ன விஷயம்?
சோமு:-மதுரைக்கு போகின்ற பஸ் மூன்று மணிக்கு மேல வரும் என்று சொன்னார்கள் அதான்..

*************************************************************************************

அப்பா:என்னடா பரிட்சை எழுதினாயே பாஸ் பண்ணியா?
மகன்:என்னை மாதிரி பசங்க எல்லாம் எழுதினா பாஸ் ஆகமாட்டாங்க..
எழுத எழுதத்தான் பாஸ் ஆவாங்க..

*************************************************************************************

பிகரோட கடற்கரை மணலில் வீடு கட்டி விளையாடியதின் அருமை
பிகரோட அண்ணன் வீடு கட்டி அடிக்கும் போதுதான் தெரியும்..

*************************************************************************************

காதலி:ஏங்க வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பீங்களா என்று என் அப்பா கேட்டார்
காதலன்:உங்க அப்பா-விற்காக இல்லாவிட்டாலும் உன் தங்கைச்சிக்காகவது இருக்கேன்டா செல்லம்..

*************************************************************************************

நர்ஸ்:பத்து நிமிஷம் லேட்டா வந்திருந்தா நோயாளியை காப்பாத்திருக்கலாம்
உறவினர்கள்:எப்படி?
நர்ஸ்:டாக்டர் வீட்டுக்கு போயிருப்பாரு!!

*************************************************************************************

மாணவன்:சார்,இங்க பாருங்க என் தலையிலே எறும்பு ஊருது
ஆசிரியர்:அதை ஏன்டா என்கிட்டே சொல்றே?
மாணவன்:நீங்க தான சொன்னீங்க என் தலையிலே எதுவுமே ஏறாது என்று!!

*************************************************************************************

ஆசிரியர்:ஏன்டா என் மேல சைக்கிள்ல மோதின?
மாணவன்:பிரேக் பிடிக்கலை சார்.
ஆசிரியர்:இதோ பிரேக் பிடிக்குதே!
மாணவன்:இல்லைச சார் நான் தான் பிரேக் பிடிக்கலை

*************************************************************************************

அப்பா:என்னம்மா தினமும் மூன்று மணி நேரம் போன்ல பேசுவாய்.
இன்னைக்கு ஒரு மணி நேரத்திலே வைச்சுட்டே.
மகள்:ராங் ரம்பர் அப்பா அதான்!

*************************************************************************************

அவள் என்னை திரும்பி பார்த்தாள்
நானும் அவளை பார்த்தேன்.
அவள் மறுபடியும் பார்த்தாள்
நானும் பார்த்தேன்

இரண்டு பேருக்குமே பரிட்சையிலே பதில் தெரியலை..

*************************************************************************************

யானை மேலே நாம உக்கார்ந்த சவாரி
யானை நம்ம மேலே உக்கார்ந்த ஒப்பாரி

*************************************************************************************

முதியவர்:சார் என்னோட அறுபதாம் கல்யாணத்திற்கு போலிஸ் பாதுகாப்பு வேண்டும்..
போலிஸ் அதிகாரி:யாருக்கு நீங்க பயப்படுறீங்க?
முதியவர்:என்னோட 59 பொண்டாட்டிகளுக்கும் தான்!!

*************************************************************************************

கொசு:அம்மா நான் சினிமாக்கு போறேன்.
அம்மா கொசு:வேண்டாம் யார் கையிலயாவது சிக்கி சின்னாபின்னமாகிடப்போற..
கொசு:பயப்படதீங்க அம்மா.நான் அஜித் படத்துக்கு தான் போறேன்.
அம்மா கொசு:அதுக்கு நீ யார் கையில் ஆவது சிக்கி உயிரையே விட்டு
விடலாம்.

No comments:

Post a Comment