நீரின்றி நீந்துகின்றேன்
உன் நினைவுகளில் தினம்
விழிமூடி இருந்தபோதும்
என்னைவிட்டு
விலகாத உன்முகம்..
என் கைகளிரண்டையும்
புறக்கணித்துவிட்டு என்
கண்களுடன் உறவாடுகிறாய்
வண்ணத்துப்பூச்சியாய் வந்தமர்ந்த நீ
என்மனதில் பல வர்ணஜாலம் காட்டி
என்னை விட்டில் பூச்சியாய் தவிக்க விட்டு
நீ மட்டும் மின்மினியாய் ஜொலித்து பறந்து...
கற்றுத் தந்துவிட்டாய் மொத்தமாய்...
உன் காதல் கற்றிலே பறந்து போகும்
காகிதக் கப்பல் என்று...(தனா)
No comments:
Post a Comment