&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Sunday 27 March 2011

நட்பே சபதமெடு


நட்பே! உணர்வுகளுக்குள்
உயர்வான உணர்வு
நட்புணர்வு தான் -அதில்
நாமும் இணைந்திருப்பது
நாழும் சந்தோசமாக வாழத்தானே...
...
நேற்று நீ செய்த செயல் எனக்கு
நிழலான கோபத்தை தந்தபோதும்
நீ பேசிய வார்த்தைகள் எனக்கு
நிஜமான கோபத்தை வரவழைத்து விட்டதே...

உன் மேடிட்ட நெற்றியில் மேடை
அமைக்கலாம் என்றபோது
சன்னமாய் சிரித்து
செல்லமாய் சிணுங்கிய நீயா -இன்று
புயலின் கோப வேகத்தோடு
நம் நல்+பூ (நட்பு) வின் புன்னகையை
சிதைக்க முயன்றாய்?......

நட்புக்குள் பிளவு ஏனடா
நமக்குள் பிரிவு தேவைதானா டா
இருமுறை கோபத்தில் நாம்
இரைந்து கொண்டோம்
இனியும் வேண்டாம் இந்த இச்சை

இன்றே சபதம் எடுப்போம்
இறுதிவரை நாம் நட்பில்
இணைந்திருப்போம் என்று.....(நட்புடன் தனா)

No comments:

Post a Comment