உயிர்வலியின் ஓசையை உள்ளத்திற்கு
உணரக் கற்றுத்தந்தவனே
உன் வாயிலிருந்து வந்தவை -வெறும்
வார்த்தைகள் இல்லை தீயின் பிளம்புகள்
சுட்டது என் உடலையல்ல
...உன்னை சுமந்த என் உள்ளத்தை..
அவை ரணமான வலியை தந்தபோதும்
என் உள்ளம் ஏனோ இன்னமும்
உன் பெயரையே உச்சரிக்கின்றது.....(தனா)
No comments:
Post a Comment