இலையுதிர் காலமாய்
இருந்த என்வாழ்வில்
வசந்தகாலமாக அவன் வருகை
அவன் புன்னகையே
...பல பூக்களின் ஸ்பரிசம்
அவனின் மௌனமான சிரிப்பு
என்மனதிற்குள் ஆயிரம்
மத்தாப்பாய் வெடிக்கின்றது
பஞ்சனை போன்ற அவன்
நெஞ்சில்ல படுத்துறங்குகிறேன்
பகலிரவு பாராமல்
அவன்ஒற்றைவரி வார்த்தையில்
நான் மொத்தமாய் தொலைகின்றேன்
எட்டி நின்று பார்த்தபோதும்
எனக்குள் முட்டி மோதுகின்றன
அவனின் சில்மிசங்கள்
கட்டுக்கடங்காத அவன் குறும்புகள்
என்னை கண்ணுறங்க விடுவதில்லை
இப்படித் திட்டுத்திட்டாய்
அவன் நினைவுகள் வருகின்றன
தினமும் என் கனவில்...(தனா)
No comments:
Post a Comment