அந்த மாலை நேரம்
அவனைக் காணும் ஆவலில்
ஆற்றங்கரையோரம் நான்
காத்திருந்த வேளை
கள்ளமாய் வந்த அவன்
மென்மையாய் என் முதுகை வருடி
சென்று வருகிறேன் அன்பே என
சேதி சொல்லி மறைந்து போக
சொல்லக்கூட வார்த்தையின்றி
சோகமாய் நான் வழியனுப்பியதும்
மெல்லமாய் வந்த நிலவு
என் மேனியெங்கும் ஒளி வீசி
கள்ளமாய் சிரித்து கவலைப்படாதே
மீண்டும் காலையில் வருவான் உன்
கதிரவக் காதலன் என்றது..........(தனா).
அவனைக் காணும் ஆவலில்
ஆற்றங்கரையோரம் நான்
காத்திருந்த வேளை
கள்ளமாய் வந்த அவன்
மென்மையாய் என் முதுகை வருடி
சென்று வருகிறேன் அன்பே என
சேதி சொல்லி மறைந்து போக
சொல்லக்கூட வார்த்தையின்றி
சோகமாய் நான் வழியனுப்பியதும்
மெல்லமாய் வந்த நிலவு
என் மேனியெங்கும் ஒளி வீசி
கள்ளமாய் சிரித்து கவலைப்படாதே
மீண்டும் காலையில் வருவான் உன்
கதிரவக் காதலன் என்றது..........(தனா).
No comments:
Post a Comment