&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Friday 1 April 2011

மலர்களே மலர்வளையமாகாதீர்

மலர்களே இனியும் தூது செல்லாதீர்
மானிடன் காதலுக்கு
பொய்மையான அவர் காதலுக்கு
சாட்சிப் பொருளாக ஏன் செல்கிறீர்?.

சூரியனின் பார்வைக்காய் மனம் ஏங்கலாம்
சுற்றியுள்ளவர் கண்களுக்கு விருந்தாகலாம்

கடவுளின் கழுத்தில் மாலையாகலாம்
கன்னியவள் கூந்தலில் சரமாகலாம்

வாழ்த்துக் கூறுபவர் கைகளில் வண்ணமாகலாம்
வண்டுகளின் உணவுக்காக தேன் கிண்ணமாகலாம்

இணைந்தவர் கைகளில் மலர்செண்டாகலாம்
- ஒருபோதும்

இறந்தவர் கால்களில் மலர் வளையமாகாதீர்.....(தனா).

No comments:

Post a Comment