அன்றைய கால பெண்ணல்ல- இவள்
வாள் போன்ற விழியின்
துணையோடு வாழ்வதற்கு.....
ஈவிரக்கமற்ற இராட்சதர்கள்
...வாழும் காலமிது இனி
இலக்கிய பெண்ணாய் வாழ்வதற்கு
இடமில்லை இவ்யுகத்தில்.....
வீறு கொண்ட பெண்ணாய்
இவள் விழித்தெழுந்து விட்டாள்.....
வயலில் களையெடுக்க இவளின்
வளைக்கரங்கள் போதுமென்றாலும்
இவள் வரும் வழியிலுள்ள
வஞ்சகர்களை களையெடுக்க
இவள் ஏந்த வேண்டும் ஆயுதம்....
தாய்மண்ணை பறிகொடுத்து
தாரத்தை பலி கொடுத்து
தன் மகவின் பசி போக்க
பூ போன்ற பெண்ணின்று
புறப்பட்டு விட்டாள்
புயலாக...........(தனா).
வாள் போன்ற விழியின்
துணையோடு வாழ்வதற்கு.....
ஈவிரக்கமற்ற இராட்சதர்கள்
...வாழும் காலமிது இனி
இலக்கிய பெண்ணாய் வாழ்வதற்கு
இடமில்லை இவ்யுகத்தில்.....
வீறு கொண்ட பெண்ணாய்
இவள் விழித்தெழுந்து விட்டாள்.....
வயலில் களையெடுக்க இவளின்
வளைக்கரங்கள் போதுமென்றாலும்
இவள் வரும் வழியிலுள்ள
வஞ்சகர்களை களையெடுக்க
இவள் ஏந்த வேண்டும் ஆயுதம்....
தாய்மண்ணை பறிகொடுத்து
தாரத்தை பலி கொடுத்து
தன் மகவின் பசி போக்க
பூ போன்ற பெண்ணின்று
புறப்பட்டு விட்டாள்
புயலாக...........(தனா).
No comments:
Post a Comment