&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Wednesday 20 April 2011

உன் கேள்விக்கான காத்திருப்பு

உனக்காக நான் வரையும்
ஒவ்வொரு கவிதைகளையும்
நீ ரசித்து படித்து விட்டு -இதை
யாருக்காக எழுதினாய் என
நீ கேட்கும் கேள்விக்கு
...ஒருதடவை இயங்க மறுப்பது
என் இதயம் மட்டுமல்ல
உனக்காக கவிவரைந்த
என் பேனா முனையும் தான்
இருந்தும் இவைகள் தினமும்
எதிர்பார்த்து காத்திருக்கின்றன
’’எனக்காகத்தானே’’ என நீ கேட்கும்
ஒரு கேள்விக்காக.........(தனா)

No comments:

Post a Comment