&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Thursday 28 April 2011

கடிவாளம் இல்லாத உன் பிடிவாதம்

என் இனிய நட்பே உன்னை
மணம் வீசும் மலராக நான் நினைக்க
நீ முள் கொண்ட ரோஜாவாகி
என் முதுகில் ஏன் குத்துகிறாய்?

உன்னை என் புன்னகை கண்டு
ஓடிவரும் உறவாகவா நான் நினைத்தேன்?
என் புதைகுழிவரை வரும்
நட்பு மலராகத்தானே நேசித்தேன்

நான் சொல்லாத சொல்லுக்கு
இலக்கணம் தேடும் நீ
என் சுவாசம் கொண்டு
நான் சொன்னவற்றை
சுலபத்தில் மறந்ததேனோ?

நான் உனைக்கேட்பதெல்லாம்
புரியாத புதிராய் இரு என்றல்ல
என்னை புரிந்து கொண்ட
நல் பூவாய் இரு என்று தானே?

இனியும் வேண்டாம் உன்
கடிவாளம் இல்லாத பிடிவாதம் அதை
கலைத்துவிடு நட்பே இல்லையேல்
அதில் கரையப் போவது நீ மட்டுமல்ல
உனை நேசிக்கும் என் உள்ளமும் தான்...(தனா)

No comments:

Post a Comment