&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Sunday 8 May 2011

காந்தமான உன் கண்கள்

என்னவனே !
உன் கண்கள் என்ன
காந்தத் துகள்களா?
இரும்பான என் மனதை
ஓர் நொடியில்
இழுத்துக்கொண்டதுவே
இயல்பாகவே...

நீ சிரிக்கும் போதெல்லாம்-என்
மனதுள் சிலிர்த்துக்கொள்கின்றன
உனக்காகவே மொட்டுவிட்ட
என் முத்தப் பூக்களெல்லாம்

உன் உதடுகள் வார்த்தைகளை
உதிர்க்கும் போதெல்லாம்
கூடவே உதிர்ந்து போவது
உன்மேல் உள்ள
என் கோப முட்களும் தான்

இப்படி என்னுள் ஏராளம்
மாற்றங்கள் தந்து என்னை
இம்சைப் படுத்துகிறது
உன் மனதில் குடியேற துடிக்கும்
உனக்கான என் இதயம்...(தனா)

No comments:

Post a Comment