&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Sunday 8 May 2011

என்றும் உன் சேயாகவேண்டும்

..இந்த அகிலத்திற்கு என்னை
அறிமுகம் செய்தவளே
உன் அன்பிற்கு நிகரில்லை
இவ் அகிலத்தில் எதுவுமே

உன் உதிரத்தை எனக்கு
உணவாக்கினாய்
உன் உறக்கத்தை எனக்கு
துணையாக்கினாய்
உன் உழைப்பால் என்னை
உயர்வாக்கினாய்
கரையில்லா அன்பால் என்னைக்
கைதாக்கினாய்
தரையில் நான் நடக்க உன்னை
புல்லாக்கினாய்
தவமிருந்து என்னை
தாலாட்டினாய்

உன் அன்பு பாட ஓரிரு வார்த்தை
போதாதம்மா
உன் எல்லையில்லா அன்புக்கு
வாழ்த்துக்கள் கோடி சொல்வேன்
என்றும் உன் சேயாக வேண்டும் என
இறைவனிடம் வேண்டியபடியே.(தனா)

No comments:

Post a Comment