பிரிவே !
என் அன்பிற்கும் உன் அன்பிற்கும்
உண்டான காலத்தை நீ - உன்
மனதிற்குள்ளேயே ஒப்பந்தம் செய்து
அதில் நம் இருவர் சார்பிலும்
நீயே கையொப்பமும் இட்டு
அந்த கால அளவும் கடந்த பின்
நீயே அதையும் சொன்னபோதுதான்
உன் பிரிவின் விளிம்பில் நின்றவேளை
புரிந்து கொண்டேன் உன்
இரகசியங்கள் எவ்வளவு
வெகுமதியானவை என்று....(தனா).
No comments:
Post a Comment