மாமரத்துக் குயிலே உன்
மனதுக்குள் என்ன வலி
நீ கூவுகிறாயா இல்லை
குழறுகிறாயா? அழுகின்ற
ஓர் இதயத்தை இன்னுமொரு
அழுகின்ற இதயம் தான்
உணர்ந்துகொள்ளும்
நானும் உணர்கிறேன்
நாளும் நீ படும் வலி
ஏன் இந்த வலி உனக்கு
என்னிடம் சொல்வாயா?
கூடிவந்த இணையா உந்தன்
குரலில் மாற்றம் தந்தது?
வாடிவிடாதே இசையே
வருங்காலம் உனக்கு வாழ்வுதரும்
கோடி ஜென்மம்போனாலும்
என்றும் குன்றாது உண்மை அன்பு
அது உன்னை நாடி வரும் நாளுக்காய்
நம்பிக்கையுடன் காத்திரு.....(தனா)
மனதுக்குள் என்ன வலி
நீ கூவுகிறாயா இல்லை
குழறுகிறாயா? அழுகின்ற
ஓர் இதயத்தை இன்னுமொரு
அழுகின்ற இதயம் தான்
உணர்ந்துகொள்ளும்
நானும் உணர்கிறேன்
நாளும் நீ படும் வலி
ஏன் இந்த வலி உனக்கு
என்னிடம் சொல்வாயா?
கூடிவந்த இணையா உந்தன்
குரலில் மாற்றம் தந்தது?
வாடிவிடாதே இசையே
வருங்காலம் உனக்கு வாழ்வுதரும்
கோடி ஜென்மம்போனாலும்
என்றும் குன்றாது உண்மை அன்பு
அது உன்னை நாடி வரும் நாளுக்காய்
நம்பிக்கையுடன் காத்திரு.....(தனா)
No comments:
Post a Comment