&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Tuesday 29 March 2011

உயிர்வலியின் உணர்வு

உயிர்வலியின் ஓசையை உள்ளத்திற்கு
உணரக் கற்றுத்தந்தவனே
உன் வாயிலிருந்து வந்தவை -வெறும்
வார்த்தைகள் இல்லை தீயின் பிளம்புகள்
சுட்டது என் உடலையல்ல
...உன்னை சுமந்த என் உள்ளத்தை..
அவை ரணமான வலியை தந்தபோதும்
என் உள்ளம் ஏனோ இன்னமும்
உன் பெயரையே உச்சரிக்கின்றது.....(தனா)

அவன் செய்து வைத்த அறிமுகம்

தொலைதூரம் இருந்தபோதும்
அழையா விருந்தாளியாய்
அவன் மனதில் நானும்
என்மனதில் அவனும் குடியேறிக்கொண்டோம்
பரிமாறிக்கொள்வதற்காய் நமக்குள்
உணர்வுகள் உருவாகிக்கொண்டன..
கறைபடியா அவன் உள்ளம்
கவர்ந்திழுக்கும் கண்கள்
தொடத்துடிக்கும் விரல்கள்
தொடாமலே தரும் முத்தம்
இன்னும் பல நினைவுகள்
அசைபோட்டுக்கொண்டன
அவன்வரவை அறிந்தபோது
புள்ளிமானாய் துள்ளியோடினேன்
அவனைநோக்கி...அங்கே எனக்கு
புதுமான் ஒன்றை அறிமுகம் செய்துவைத்தான்
இவள்என் மனைவியென்று......(தனா)

அழியாத உன் நினைவுகள்

உதிர்ந்த பூக்கள் மீண்டும்
மலர்வதில்லை அதுபோல்தான்
உன்னால் அழிக்கப்பட்ட
என்காதலும் மீண்டும்
உருவாகாது.....
...மலர்ந்த பூக்கள்
உதிர்ந்த பின்பும்
மரம் இருப்பதுபோல்
உதித்த உன் காதல்
மறைந்த பின்பும்
அழியாத உன் நினைவுகள்
இன்னமும் என் மனதில்...(தனா)
அன்பே உன் அந்திநேர
வருகை கண்டு
என் கன்னங்கள்
செந்நிறம் பூசிக்கொள்கின்றன

இமைகள் இரண்டும்
இமைக்க மறுக்க
இதழ்களோ இணைய
மறுக்கின்றன....

கைவிரல்கள் தாளம்போட
கால்விரல் கோலம் போடுவதை
பார்த்து என்வீட்டு
மல்லிகைச்செடியுடன்
எதிர்வீட்டி மல்லிகைச்செடி
எம் உறவை பற்றி
கிசுகிசுத்துக் கொள்கின்றன...
என்முன்னே.....

பிரகாசிக்கும் உன்முகம்
பார்த்து நான்
பிரசவித்துக்கொண்டே
இருக்கின்றேன் புன்னகையை

இருந்தும் எனக்குள்
இன்னும் பேராசை தான்
'''நிலவே'''
இரவில் மட்டுமல்ல
நீ பகலிலும்
வரக்கூடாதா என்று....(தனா)
இன்னும் சற்று நேரத்தில்
கடும் வெப்பத்தை கொட்டி
தன்னை சருகாக்கப்போகிறான்
என்பதை புரியாமல்
பூத்துக்குலுங்கிய அந்த
...புதுரோஜா சூரியனைப் பார்த்து
தலைசாய்த்து வரவேற்கின்றது...(தனா).

Monday 28 March 2011

எப்போது புரியும் என் தவம்...?

அன்பே!
எப்போது புரியும் உனக்கு
உன் மௌனமெனும்
இலையுதிர்காலத்தில்
இருக்கும் என்மனம் 

உன் வார்த்தையெனும்
வசந்தகாலத்துக்காக
தவமிருப்பதை......(தனா)

காகிதக் கப்பல்


நீரின்றி நீந்துகின்றேன்
உன் நினைவுகளில் தினம்
விழிமூடி இருந்தபோதும்
என்னைவிட்டு
விலகாத உன்முகம்..
  
என் கைகளிரண்டையும்
புறக்கணித்துவிட்டு என்
கண்களுடன் உறவாடுகிறாய்

வண்ணத்துப்பூச்சியாய் வந்தமர்ந்த நீ 
என்மனதில் பல வர்ணஜாலம் காட்டி
என்னை விட்டில் பூச்சியாய் தவிக்க விட்டு 
நீ மட்டும் மின்மினியாய் ஜொலித்து பறந்து...
கற்றுத் தந்துவிட்டாய் மொத்தமாய்... 
உன் காதல் கற்றிலே பறந்து போகும்
காகிதக் கப்பல் என்று...(தனா)

உந்தன் ஸ்பரிசம்



கண்கள் அருவியாக கண்ணீர்
சிந்தியபோது
இமைகள் இதமாக
அணைத்துக்கொண்டது...
அப்பொழுதும்

என் கண்கள் ஏனோ உனக்கு
நன்றி கூறியது -ஏனெனில்
இமைகள் தந்த ஸ்பரிசத்தை
உன் உதடுகள் தந்ததாக
உணர்ந்ததினாலோ..?..(தனா)

உன்னால் அறுக்கப்பட்ட காற்றாடி

நீயாகவே என்னை
தேடி வந்தாய்
உன் நினைவில் என்னை
மிதக்க வைத்தாய்

காற்றாடி போல என்னை
பறக்க விட்டு
கடைசியில் கயிற்றை
அறுத்து விட்டாய்

ஏன் என்று புரியாமல்
தடுமாறுறேன் எங்கு தான்
வீழ்வேன் என்று
தெரியாமலே.......(தனா).


Sunday 27 March 2011

என் கனவுக் காதலன்

இலையுதிர் காலமாய்
இருந்த என்வாழ்வில்
வசந்தகாலமாக அவன் வருகை

அவன் புன்னகையே
...பல பூக்களின் ஸ்பரிசம்
அவனின் மௌனமான சிரிப்பு
என்மனதிற்குள் ஆயிரம்
மத்தாப்பாய் வெடிக்கின்றது

பஞ்சனை போன்ற அவன்
நெஞ்சில்ல படுத்துறங்குகிறேன்
பகலிரவு பாராமல்
அவன்ஒற்றைவரி வார்த்தையில்
நான் மொத்தமாய் தொலைகின்றேன்

எட்டி நின்று பார்த்தபோதும்
எனக்குள் முட்டி மோதுகின்றன
அவனின் சில்மிசங்கள்
கட்டுக்கடங்காத அவன் குறும்புகள்
என்னை கண்ணுறங்க விடுவதில்லை

இப்படித் திட்டுத்திட்டாய்
அவன் நினைவுகள் வருகின்றன
தினமும் என் கனவில்...(தனா)

நட்பே சபதமெடு


நட்பே! உணர்வுகளுக்குள்
உயர்வான உணர்வு
நட்புணர்வு தான் -அதில்
நாமும் இணைந்திருப்பது
நாழும் சந்தோசமாக வாழத்தானே...
...
நேற்று நீ செய்த செயல் எனக்கு
நிழலான கோபத்தை தந்தபோதும்
நீ பேசிய வார்த்தைகள் எனக்கு
நிஜமான கோபத்தை வரவழைத்து விட்டதே...

உன் மேடிட்ட நெற்றியில் மேடை
அமைக்கலாம் என்றபோது
சன்னமாய் சிரித்து
செல்லமாய் சிணுங்கிய நீயா -இன்று
புயலின் கோப வேகத்தோடு
நம் நல்+பூ (நட்பு) வின் புன்னகையை
சிதைக்க முயன்றாய்?......

நட்புக்குள் பிளவு ஏனடா
நமக்குள் பிரிவு தேவைதானா டா
இருமுறை கோபத்தில் நாம்
இரைந்து கொண்டோம்
இனியும் வேண்டாம் இந்த இச்சை

இன்றே சபதம் எடுப்போம்
இறுதிவரை நாம் நட்பில்
இணைந்திருப்போம் என்று.....(நட்புடன் தனா)

நீ கேட்ட கவிதை

உன்னை நீ மிக அருகில் பார்த்த

என் கண்கள் இரண்டும் என்னை

எனக்கே மிக அருகில் பார்க்க வைத்த

உன் கண்கள் இரண்டும் தான்

நீ கேட்ட நான்குவரி கவிதை -- (தனா)


சொல்லிவிடு....!!!

அன்று நீ பிரிவை சிறு புள்ளியாக
வைக்கும் போதே வேண்டாம்- அழித்துவிடு என்றேன்

நீயோ என்னை
புரியாத சிறு பெண் என்று 

கேலி செய்தாய்
இன்று அது கோடாக 

நீண்டு செல்கிறதே
இப்போது என்ன சொல்வாய்?
அது நம்மை இணைப்பதற்கா?
இல்லை பிரிப்பதற்கா?

( தனா)

திருப்பித்தருவாயா???

நான் பிரிய மனமின்றி விட்டுச் செல்லும்
என்னவனின் கால் தடயங்களை
தினமும் வந்து திருடிச் செல்லும் அலையே...
இன்றும் விட்டுச் செல்கின்றேன்
என்றாவது ஒரு நாள் திருப்பித்தருவாய்
எனும் நம்பிக்கையில்..........(தனா)

நகைச்சுவை

படித்ததில் பிடித்த நகைச்சுவை

எதை நீ படித்தாய் மறப்பதற்கு;
எதை நீ கவனித்தாய் அது புரியாமல் இருப்பதற்கு;
என்று நீ காலேஜ் ஒழுங்காக வந்தாய்
அட்டண்டென்ஸ் சார்ட்டேஜ் அடிக்காமல் இருப்பதற்கு;
எந்த பிகர் இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவராகிறது
மற்றொரு நாள் அது வேறொருவராகிவிடும்...

*************************************************************************************

நோயாளி:காதில ஏதோ ரயில் ஓடுற மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்..
டாக்டர்: செக் பண்ணினேன் அது எல்லாம் ஒன்னும் இல்லையே..
நோயாளி:ஒரு வேளை ஏதாவது ஸ்டேஷன்ல நின்றிருக்குமோ?
டாக்டர்:???

*************************************************************************************

சர்தார் புதுசா ஒரு வண்ணத் தொலைக்காட்சி வாங்கினார்.
வீட்டிற்கு வந்தவுடனே அதை தண்ணிரில் போட்டார்..
ஏன் தெரியுமா..?
வண்ணம் போகுமா என்று பார்க்கத்தான்..

*************************************************************************************

என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும்
நமக்கு நாமே போன் பண்ணும் போது பிஸியா தான் இருப்போம்

*************************************************************************************

ஒருவர்:எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,
மற்றொருவர்: ஏன்?
ஒருவர்:கீதையில சொல்லியிருக்கே'எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது'அதான்..

*************************************************************************************

என் மனைவி அருவி மாதிரி
ஏன்டா?
அவ!எந்த நேரமும் கொட்டிக்கிட்டே(சாப்பிட்டிக்கிட்டே) இருப்பா..

*************************************************************************************

என் கணவரை சந்தோஷப்படுத்துறதுதான் என் நோக்கமே!
நிஜமாக சொல்ற?
பின்னே..இன்னிக்கு காலையில கூட
சாம்பார் ரொம்ப அருமையாக இருக்கு..என்று
சொல்லி அவரை சந்தோஷப்படுத்தினே..

*************************************************************************************

ஜலதோஷம் தாங்க முடியலை டாக்டர்
அதுக்கு எதுக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தீங்க?
ஆவி பிடிக்கலாமேன்னு தான்

*************************************************************************************

டாக்டர்:மீன் முட்டை சாப்பிடுவதை நீங்க உடனே நிறுத்திடனும்..
நோயாளி:மீன் முட்டையை நான் கண்ணால் கூட பார்த்ததில்லை டாக்டர்..
டாக்டர்:????

*************************************************************************************

டாக்டர்:நான் கொடுத்த தூக்க மாத்திரை நன்றாக வேலை செய்யுதா?
நோயாளி:தெரியலை டாக்டர்! மாத்திரை சாப்பிட்ட உடனே நான் நல்லா தூங்கிட்டேன்..

*************************************************************************************

ஒருவர்:என்னப்பா..உன் மகன் சிகரெட் அடிக்கிறானே..அவனை தட்டி கேட்க மாட்டியா..
மற்றொருவர்:கேட்டேன்..தர மாட்டேங்கிறான்..

*************************************************************************************

மனைவி:ஒரு மணி நேரமா எதையோ தேடிக்கிட்டு இருக்கிங்களே..பேசாம கண்ணாடி போட்டு தேட வேண்டியதுதானா..
கணவர்: அதைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்..

*************************************************************************************

மகன்:அப்பா..நானும் அம்மாவும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறோம்.நான் எங்கு ஒளிந்து கொள்ள.
அப்பா:சமையலறையில் ஒளிஞ்சுக்க...உங்க அம்மா அங்க வரமாட்டா..

*************************************************************************************

அப்பா:உன் வயசுல அப்துல் கலாம் ரொம்ப படிச்சாரு தெரியுமா?
மகன்:அவர் உஙக் வயசில ஜனாதிபதியாக இருக்கார்..நீங்களும் இருக்கீங்களே..

*************************************************************************************

மனைவி:எதிர்வீட்டுக்காரன் மனைவி எங்கேயோ ஓடிப்போயிட்டாலாம்..
கணவன்:அவன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கும்..
மனைவி:...???

*************************************************************************************

அசின்:-பதிவை படிக்கிற பையன் பாரேன்டி..
சிம்ரன்:- சூப்பரா இருக்கான்டி..
சினேகா:-அவன் என்னை பார்க்கத்தான் வருகிறான்..
நமிதா:-முதல்ல அவன் என் ஆளு தெரிஞ்சுக்கோங்க..
பாவனா:-அவன் என் மாமா பையன் தெரியுமா?..
பறவை முனியம்மா:-அடி சிறுக்கிங்களா,,அவன் என் புருஷன்டீ..
(சும்மா தமாசு..)

*************************************************************************************

ராமு:-டேய்,நாளைக்கு நான் சினிமாவுக்கு போரேன்..வர்ரியா?
சோமு:-முடிஞ்சா வரேன்டா..
ராமு:-முடிஞ்ச பிறகு ஏன்டா வர்ர..படம் ஆரம்பிக்கும் போதே வந்துவிடு..

*************************************************************************************

ஆசிரியர்:-மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மாணவன்:-மணலுக்கு சொரிந்து விட்டு நைசில் பவுடர் போட வேண்டும்..

*************************************************************************************

ஆசிரியர்:-'சூரியன் மேற்கே மறையும்'இது நிகழ்காலமா,எதிர்காலமா,கடந்தகாலமா?
மாணவன்:-அது 'சாயங்காலம்'
ஆசிரியர்:-????

*************************************************************************************

காற்றில் அவள் துப்பட்டா பறந்து வந்து என் மீது விழுந்தது..
எனக்கு பயங்கர சந்தோசம்..
சைக்கிள் துடைக்க துணி கிடைத்து விட்டது என்று..

*************************************************************************************

பசங்க மனசு மொபைல் மாதிரி..
பொண்ணுங்க மனசு தண்ணீர் மாதிரி..
தண்ணீர்ல மொபைல் விழுந்தாலும் மொபைல்ல தண்ணீத் விழ்ந்தாலும் ஆபத்து மொபைலுக்குத்தான்..

*************************************************************************************

காதலன்:-அன்பே..நான் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவுதான்!..
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்.

*************************************************************************************

ராமு:-பஸ் ஸ்டாப்ல நின்னு மேலையே பார்த்து கிட்டு இருக்கீங்களே என்ன விஷயம்?
சோமு:-மதுரைக்கு போகின்ற பஸ் மூன்று மணிக்கு மேல வரும் என்று சொன்னார்கள் அதான்..

*************************************************************************************

அப்பா:என்னடா பரிட்சை எழுதினாயே பாஸ் பண்ணியா?
மகன்:என்னை மாதிரி பசங்க எல்லாம் எழுதினா பாஸ் ஆகமாட்டாங்க..
எழுத எழுதத்தான் பாஸ் ஆவாங்க..

*************************************************************************************

பிகரோட கடற்கரை மணலில் வீடு கட்டி விளையாடியதின் அருமை
பிகரோட அண்ணன் வீடு கட்டி அடிக்கும் போதுதான் தெரியும்..

*************************************************************************************

காதலி:ஏங்க வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பீங்களா என்று என் அப்பா கேட்டார்
காதலன்:உங்க அப்பா-விற்காக இல்லாவிட்டாலும் உன் தங்கைச்சிக்காகவது இருக்கேன்டா செல்லம்..

*************************************************************************************

நர்ஸ்:பத்து நிமிஷம் லேட்டா வந்திருந்தா நோயாளியை காப்பாத்திருக்கலாம்
உறவினர்கள்:எப்படி?
நர்ஸ்:டாக்டர் வீட்டுக்கு போயிருப்பாரு!!

*************************************************************************************

மாணவன்:சார்,இங்க பாருங்க என் தலையிலே எறும்பு ஊருது
ஆசிரியர்:அதை ஏன்டா என்கிட்டே சொல்றே?
மாணவன்:நீங்க தான சொன்னீங்க என் தலையிலே எதுவுமே ஏறாது என்று!!

*************************************************************************************

ஆசிரியர்:ஏன்டா என் மேல சைக்கிள்ல மோதின?
மாணவன்:பிரேக் பிடிக்கலை சார்.
ஆசிரியர்:இதோ பிரேக் பிடிக்குதே!
மாணவன்:இல்லைச சார் நான் தான் பிரேக் பிடிக்கலை

*************************************************************************************

அப்பா:என்னம்மா தினமும் மூன்று மணி நேரம் போன்ல பேசுவாய்.
இன்னைக்கு ஒரு மணி நேரத்திலே வைச்சுட்டே.
மகள்:ராங் ரம்பர் அப்பா அதான்!

*************************************************************************************

அவள் என்னை திரும்பி பார்த்தாள்
நானும் அவளை பார்த்தேன்.
அவள் மறுபடியும் பார்த்தாள்
நானும் பார்த்தேன்

இரண்டு பேருக்குமே பரிட்சையிலே பதில் தெரியலை..

*************************************************************************************

யானை மேலே நாம உக்கார்ந்த சவாரி
யானை நம்ம மேலே உக்கார்ந்த ஒப்பாரி

*************************************************************************************

முதியவர்:சார் என்னோட அறுபதாம் கல்யாணத்திற்கு போலிஸ் பாதுகாப்பு வேண்டும்..
போலிஸ் அதிகாரி:யாருக்கு நீங்க பயப்படுறீங்க?
முதியவர்:என்னோட 59 பொண்டாட்டிகளுக்கும் தான்!!

*************************************************************************************

கொசு:அம்மா நான் சினிமாக்கு போறேன்.
அம்மா கொசு:வேண்டாம் யார் கையிலயாவது சிக்கி சின்னாபின்னமாகிடப்போற..
கொசு:பயப்படதீங்க அம்மா.நான் அஜித் படத்துக்கு தான் போறேன்.
அம்மா கொசு:அதுக்கு நீ யார் கையில் ஆவது சிக்கி உயிரையே விட்டு
விடலாம்.

வரமொன்று தந்துவிடு....!

அதிகாலை பொழுதிலேயே
அரங்கேறும் உன் நினைவு
உயிர் கொண்ட ஓவியமாய்
உலவுகிறது என் மனதில்
பிரிவொன்றை பரிசளித்து என்னை
நடைப்பிணமாக்கிப் போன பின்பும்
உறவென்று உனை அழைப்தற்காய்
தினம் துடிக்கிறது என் உதடு

வாழ்வொன்று தர வழியில்லை என்றால்
வரமொன்று தந்துவிடு அன்பே
நீ என்னை விட்டு நீங்கிய கணமே
நான் நீறாக வேண்டும் என்று..........(தனா).
 

Friday 25 March 2011

தென்றலே!! செய்தி சொல்லாயோ?

தேசம் கடந்து சென்று அவன்
கேசம் கலைத்துவரும் தென்றலே
என் பாசம் வெறும் வேஷம் இல்லையென்று
அவனிடம் நேசத்துடன் சொல்லிவிடு
நீ அவனை தழுவிவருவதால் தான்
நான் உன்னை சுவாசிக்க மட்டுமல்ல
யாசிக்கவும் செய்கிறேன்......

நீ என்னைத் தீண்டும் போதெல்லாம்
என்னுள் நீள்கிறது அவன் நினைவு
ஏன் இந்த வன்மம் உனக்கு
என் அன்பு போல் ஒருதலை பட்சமாக  ----- (தனா)
 

Thursday 24 March 2011

அழிக்க முடியாத உன் பெயர்

இனிமையான கவிதை எழுது என்றாய்
உடனே உன் பெயரை பலமுறை
எழுதத் தொடங்கினேன்
என் கடதாசியும் முடிந்துவிட்டது
பேனா மையும் தீர்ந்துவிட்டது
.கையும் ஓய்ந்துவிட்டது- இருந்தும்
என் எண்ணம் மட்டும் மறையாமல்
கவி வரைந்து கொண்டேயிருக்கின்றது
என்றும் அழிக்கமுடியாதபடி
என் ஆழ்மனதில்...................(தனா).
 

தூது செல் ஓடையே...!

சலசலக்கும் ஓடையே
இந்த சங்கீதத்தை எங்கு கற்றாய்
என்னவனின் சிரிப்பலை போல்
நீ இசைந்து கொண்டேசெல்கிறாயே

பள்ளம் தேடி ஓடும் வெள்ளமான
உன்னைப் போல் தினமும்
அவன் உள்ளம் நாடி செல்லும்
பேதை எனக்காக நீ......
மெல்லமாய் அவனிடம் சொல்லிவிட்டு வா
கள்ளமில்லா அவன் உள்ளத்தில் நான்
கைதியாக விரும்புகிறேன் என்று.......(தனா).
 

Wednesday 23 March 2011

உறவுகளே !

உறவுகளே !
சிறகு விரித்துப் பறக்கும் என்
கற்பனைகளை சித்தரிக்கும் நோக்கில்
கவி வடிவில் புனைந்துள்ளேன்
உற்றுப் பாருங்கள் நன்றாய்-அன்று
விட்டுப் போன நினைவுகளை
மெல்லத் தட்டிப்பார்க்கும் வரிகள்.