
சிறகடித்துப் பறந்த நாட்கள்
மொட்டுமொட்டாய் மனத்திரையில்
வட்டமிடுகின்றன இன்னமும்
பாடித்திரிந்த பசுமைவயல்
பழுதடைந்த பாடசாலை கட்டிடம்
பாக்கியம் வீட்டு நெல்லிமரம்

எதிர்வீட்டு கொய்யாமரம்
பட்டம் பறிக்கும் பனைமரம்
விண்ணைத் தொட்டுவிடத்துடிக்கும்
தென்னை மரம் இவை எல்லாமே
இன்று என் கண்முன்னே ’’போரில்’’
பிரிந்து சென்ற நட்புறவுகள் மட்டும்
எங்கெங்கோ வாழ்கின்றன
திசைமாறிய பறவைகளாக....(தனா)
.
nalla illaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
ReplyDeletethzzzzzzzzz.
ReplyDelete