காற்றலையாக வந்து
கரம் கொடுக்கும் நட்பை
நேற்று வரை அறிந்ததில்லை
அவை நிகரில்லா உறவென்று
துன்பம் ஒன்று நேர்கையில்
தூரப்போகும் உறவுகளை விட
தேடி வந்து தோள்கொடுத்து
தேற்றிவிடும் தோழமை மேல்
தேடிவரும் சொந்தமெல்லாம்
தேவை தீர்ந்தபின் ஓடிபோக
நாடி வந்து துயர் தீர்ப்பது
நட்பு என்னும் உறவு மட்டுமே...(தனா)
No comments:
Post a Comment