&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Monday 4 April 2011

நட்புக்கு என் நன்றிகள்

காற்றலையாக வந்து
கரம் கொடுக்கும் நட்பை

நேற்று வரை அறிந்ததில்லை
அவை நிகரில்லா உறவென்று

துன்பம் ஒன்று நேர்கையில்
தூரப்போகும் உறவுகளை விட
தேடி வந்து தோள்கொடுத்து
தேற்றிவிடும் தோழமை மேல்

தேடிவரும் சொந்தமெல்லாம்
தேவை தீர்ந்தபின் ஓடிபோக
நாடி வந்து துயர் தீர்ப்பது
நட்பு என்னும் உறவு மட்டுமே...(தனா)

No comments:

Post a Comment