&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Saturday 10 September 2011

உன் மனம்

அன்பே !
மழைக்கால குடைக் காளானாக
உன் மனம் இருப்பது புரியாமல்- நான்
உன் இதயவறையில் குடியேற விரும்பி
இமைமூடி உன் நினைவுகளை இதமாக
இரைமீட்டுக்கொண்டிருந்த வேளையில்
நீயோ என் அன்புக்கு இறுதியுரையை
இரக்கமின்றி எழுதிவிட்டுச்செல்ல
நானோ உன் பாதச்சுவடுகளில் -என்
பார்வையைப் பதித்தபடியே பயணிக்கின்றேன்
எனக்கான உன் இறுதி வரியை எதிர்பார்த்து..(தனா)

No comments:

Post a Comment