தீயின்றி நீ மூட்டும் வேள்வி
தினமும் என் மனதுக்குள்
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் என்பர்
அங்கே முட்களும் இருப்பதாலா?
காற்றைக் கிழித்து வரும் பாணம் கூட
சிலவேளை கருணை கொண்டு
இலக்கை மாற்றும் - ஆனால்
கண்ணசைவில் வந்தகாதல் மட்டும்-மனதை
காயப்படுத்திக் களித்துக்கொள்ளும்
வாசம் கொண்ட மல்லிகை கூட
வாடிய பின்பும் நறுமணம் வீசுகையில்
தேசம் மாறிப்போன பின்பு - மனதின்
நேசம் மட்டும் நிறம் மாறுவதேனோ....(தனா)
No comments:
Post a Comment