&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Saturday 10 September 2011

நிறம் மாறும் நேசம்

தீயின்றி நீ மூட்டும் வேள்வி
தினமும் என் மனதுக்குள்
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் என்பர்
அங்கே முட்களும் இருப்பதாலா?

காற்றைக் கிழித்து வரும் பாணம் கூட
சிலவேளை கருணை கொண்டு
இலக்கை மாற்றும் - ஆனால்
கண்ணசைவில் வந்தகாதல் மட்டும்-மனதை
காயப்படுத்திக் களித்துக்கொள்ளும்

வாசம் கொண்ட மல்லிகை கூட
வாடிய பின்பும் நறுமணம் வீசுகையில்
தேசம் மாறிப்போன பின்பு - மனதின்
நேசம் மட்டும் நிறம் மாறுவதேனோ....(தனா)

No comments:

Post a Comment