&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Saturday 10 September 2011

நான் மாற வேண்டும்

அன்பே !
நீ கையொப்பமிடும் காகிதமாக
நான் மாறவேண்டும் - இல்லையேல்
நீ கசக்கியொறியும் கடதாசியாய்
நான் மாற வேண்டும்....

உன் பாதங்கள் விட்டுச் செல்லும் சுவடாக
நான் மாற வேண்டும் - இல்லையேல்
அவற்றை பறித்துச்செல்லும் காற்றாக
நான் மாற வேண்டும்...

உன் பார்வைகளில் மலரும் பூவாக
நான் மாற வேண்டும் - இல்லையேல்
உன் பாதத்தில் மிதிபடும் புல்லாக
நான் மாற வேண்டும்...

மொத்தத்தில் நான் மாற வேண்டும்
நீ காட்டிய நேசத்துக்கு நிகரான சேவகியாய்...(தனா)

No comments:

Post a Comment