அன்பே !
நீ கையொப்பமிடும் காகிதமாக
நான் மாறவேண்டும் - இல்லையேல்
நீ கசக்கியொறியும் கடதாசியாய்
நான் மாற வேண்டும்....
உன் பாதங்கள் விட்டுச் செல்லும் சுவடாக
நான் மாற வேண்டும் - இல்லையேல்
அவற்றை பறித்துச்செல்லும் காற்றாக
நான் மாற வேண்டும்...
உன் பார்வைகளில் மலரும் பூவாக
நான் மாற வேண்டும் - இல்லையேல்
உன் பாதத்தில் மிதிபடும் புல்லாக
நான் மாற வேண்டும்...
மொத்தத்தில் நான் மாற வேண்டும்
நீ காட்டிய நேசத்துக்கு நிகரான சேவகியாய்...(தனா)
No comments:
Post a Comment