&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Saturday 10 September 2011

என் மனம்

என் மனம் என்னும் வீதியில்
குறுந்தூரப் பயணியாய் நீ வந்தாய்
சேரும் இடம் வருமுன்னே மாற்றிவிட்டாய்
உந்தன் பயணப் பாதையை
ஏன் என்று கேட்டதும் ..
என் பார்வைக்கு இதம் சேர்க்க
இங்கு பசுமையில்லை என்ற உனக்கு
எங்கே தெரியப்போகிறது - நான்
உன் பாதங்களைப் பாதுகாப்பதற்காகவே
முட்களுக்கு பயந்து செடிகளை மட்டுமல்ல
பூக்களையும் புறக்கணிக்கின்றேன் என்பது...(தனா)

No comments:

Post a Comment