&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Saturday 16 July 2011

உள்ளங்களின் உணர்வுக்குவியல்கள்

பிரிவுகள் நம்மைப் பிரிப்பதில்லை
நம் பிரியங்கள் நம்முள் வாழும்வரை
நிஜங்கள் ஒருபோதும் நிழலாவதில்லை
நம் நினைவுகள் நிஜமாய் உள்ளவரை
நீ பிரிந்து சென்றாலும் உந்தன்
நினைவுகள் இரைமீட்கும்
என் மீதி நாட்களை
கண்விழித்ததும் கலைந்து போக
இது கண்கள் காணும் கனவல்ல
இது நம் உள்ளங்களின்
உணர்வுக் குவியல்கள்
அவை காற்றால் மட்டுமல்ல
காலத்தாலும் கலைக்க முடியாதவை..(தனா)

No comments:

Post a Comment