&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Sunday 17 July 2011

உன் யாசகியாக நான்

என்னவனே !
உன் மனம் என்னும்
அட்சய பாத்திரத்தை நம்பி
உன் அன்பை தினமும்
யாசிக்கும் யாசகியாய் நான்...
நீயோ வலிகளை மட்டும்
அள்ளிக்கொடுக்கின்றாய்
வரையறை என்பதே இல்லாமல்- இருந்தும்
வேண்டாம் என்ற சொல்லை என் மனம்
உதிர்க்க மறுக்கிறது ஏனெனில்
என்றாவது ஒருநாள் அந்த வலிகளுடன்
உன் சிறு அன்பையும் யாசிக்கக் கூடும்
என்ற பேராசையில் இன்றும்
உன் அன்பின் யாசகியாய் நான்.......(தனா)

No comments:

Post a Comment