&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Sunday 31 July 2011

எப்படி வலி சொல்வேன்

அன்பே !
என் இதயம் ஓய்வு தேடி இடைவேளை விட்டு
துடித்த போதும் என் உள்ளம் ஒரு நொடிகூட
உன் நினைவை சுமக்க மறுத்ததில்லையே
என் மெளனங்கள் கண்டு என் அன்பை
நீ மரக்க வைத்துச் சென்றவேளை
என் வார்த்தைகளின் மரணஒலியை
நீ ஒரு நொடிகூட உணரவில்லையா?- அன்று
தென்றலாய் நீ என்னை வருடிச்சொல்கையில்
மெளனமாய் நானும் தலை சாய்த்தேன் -இன்று
முட்களால் என்மனதை நீ கீறிச்செல்கையில்
வார்த்தைகளால் எப்படி வலி சொல்வேன்?....(தனா)

No comments:

Post a Comment