&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Saturday 16 July 2011
அமாவாசையின் அடிமை
எட்டாத வானத்தின் எழிலரசி அவள்
ஆயிரம் தீபங்களுக்கு நடுவே
அலங்கரிக்கப்பட்ட மணப்பெண்ணாய்
கண்களுக்கு விருந்தளித்து
கவிதைகளுக்கு கருக்கொடுத்து கவிஞர் மனதில் காதலியாகி
கருமேகங்களுடன் கைகோர்த்து
கண்ணாமூச்சி ஆடிவிட்டு
கடைசியில் கரைந்து போகிறாள்
அமாவாசையின் அடிமையாக.....(தனா)
No comments:
Post a Comment