&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Sunday 31 July 2011

இதயத்தின் பரிசு



பூத்துக்குலுங்கிய ரோஜாத்தோட்டத்தில்

பூப்பறிக்கப்பட்ட செடியாய் அவள் மனது
நீயோ உன் அன்பு மலர்களால் அவள் மனதை
அலங்கரிக்க துடிக்கிறாய் -ஆனால் அவளோ
முள்ளை மட்டும் சுமக்கும் தன் மனது
உன் அன்பு மலர்களைக் காயப்படுத்திவிடுமோ
என் பயந்து தன்னை கருக்கிவிடு என
கதிரவனிடம் வேண்டி கடுந்தவம் புரிகிறாள்
வலிகளுடன் வாழும் இதயத்தால்
வாழ்த்துக்களை மட்டும் தான் பரிசளிக்க
முடியும்..... வலிகளையல்ல........(தனா)

No comments:

Post a Comment