&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Sunday 17 July 2011

வெட்கத்துளிகள்

வர்ணங்கள் பல கொண்டு வட்டமிடும்
வண்ணத்துப்பூச்சி போல் என் மனமும்
எண்ணங்கள் பல கொண்டு
இறக்கை விரித்துப் பறக்கின்றது
தரையில் நடக்க மறுக்கும் கால்கள்
தாள லயத்துடன் தளிர்நடை போடுகின்றது
இதுவரை எனைப்பற்றி உன் விரல்கள் எழுதிய
கவிவரிகள் போதாதென்று நாளை
உன் விழிகள்எழுதப்போகின்றன என
நீ கூறியதை நினைத்து
என் விழிகள் இன்றே
சேமிக்கத்தொடங்கிவிட்டன
உன் விழிகளுக்கான பரிசுக்குவியலாக
தன் வெட்கத்துளிகளை.......(தனா)

No comments:

Post a Comment