&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Sunday 31 July 2011

என் மனம் திருடிய திருடன்

என் வாழ்க்கைப் பயணத்தின் நாட்களை
நான் கடந்து சென்று கொண்டிருந்தவேளை
யாரோ எனைக் கைதட்டி அழைக்கும் ஓசைகேட்டு
திரும்பிப் பார்த்தேன் அவன் - சிலைபோல்
நின்றபடி சிரித்துக்கொண்டே கேட்டான்
உனக்கு துணையாய் நான் வரவா என - நானோ
தனியாய் பயணிக்கவே விரும்புகிறேன் என கூறி
தடம் பதிக்க தொடங்கிய போது தான்
என் கால்களின் தடுமாற்றம் கண்டு நான்
புரிந்துகொண்டேன் அவன் வழிப்போக்கன் அல்ல
என் மனம் திருடிய வழிப்பறித்திருடன் என்று...(தனா)

No comments:

Post a Comment