&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Sunday 31 July 2011

உன் குரலோசை

காற்றலையில் வந்த உன்குரல் கேட்டு நான்
கண்ணுறக்கம் தொலைத்து விட்டேன்
நேற்று வரை குயிலோசை ரசித்த மனதுக்கு
இன்றுமுதல் உன்குரலே இசையாகிவிட்டதுவே
காற்று கூட அறிந்திடாத உன்குரல் மாற்றத்தை
என் மனம் கணநொடியில் புரிந்து கொண்டதுவே
தோற்றங்கள் தொலைவில் இருந்தாலும் குரல்
மாற்றங்களை மனது அறிந்து கொள்ளுமே
அழைப்பது எதுவோ நீயாகிலும் என்னை
அடைவது உந்தன் குரலோசை தானே
உதடுகள் போலி வார்த்தையை உச்சரித்தாலும் என்
உள்ளத்தில் உறைவது உன் உண்மை மட்டுமே...(தனா)

No comments:

Post a Comment