&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Monday 6 June 2011

நிறம்மாறும் பாசங்கள்

காரணங்கள் இன்றியே
கலைந்து சொல்லும் மேகங்களே
ஏன் இந்த வன்மம் உங்களுக்குள்
என்னவனின் எண்ணம் போலே

அந்த வானமகளின் வேதனையை
இந்த வஞ்சி மனமும் உணர்கிறதே
ஆழமான அன்பு கூட இந்த
ஆகாயத்திற்கு உறவாகி விட்டதே

நிலையில்லா மேகம் போல்
அவன் மனமும் தடையில்லாமல்
தடம் புரள்வதினால்
விடை கூட தெரியாமல் இவள்
விழி நீரில் நனைகிறதே

வேஷங்கள் தான் நிஜமென்றால்
பாசங்கள் பொய்யாவது இயல்பே
காலங்கள் கரைந்தோடலாம்
தூரங்கள் பெரிதாகலாம்
பாரங்கள் சுமையாகலாம் உன்
பாசம் மட்டும் நிறம் மாறலாமா..(தனா)

No comments:

Post a Comment