காரணங்கள் இன்றியே
கலைந்து சொல்லும் மேகங்களே
ஏன் இந்த வன்மம் உங்களுக்குள்
என்னவனின் எண்ணம் போலே
அந்த வானமகளின் வேதனையை
இந்த வஞ்சி மனமும் உணர்கிறதே
ஆழமான அன்பு கூட இந்த
ஆகாயத்திற்கு உறவாகி விட்டதே
நிலையில்லா மேகம் போல்
அவன் மனமும் தடையில்லாமல்
தடம் புரள்வதினால்
விடை கூட தெரியாமல் இவள்
விழி நீரில் நனைகிறதே
வேஷங்கள் தான் நிஜமென்றால்
பாசங்கள் பொய்யாவது இயல்பே
காலங்கள் கரைந்தோடலாம்
தூரங்கள் பெரிதாகலாம்
பாரங்கள் சுமையாகலாம் உன்
பாசம் மட்டும் நிறம் மாறலாமா..(தனா)
கலைந்து சொல்லும் மேகங்களே
ஏன் இந்த வன்மம் உங்களுக்குள்
என்னவனின் எண்ணம் போலே
அந்த வானமகளின் வேதனையை
இந்த வஞ்சி மனமும் உணர்கிறதே
ஆழமான அன்பு கூட இந்த
ஆகாயத்திற்கு உறவாகி விட்டதே
நிலையில்லா மேகம் போல்
அவன் மனமும் தடையில்லாமல்
தடம் புரள்வதினால்
விடை கூட தெரியாமல் இவள்
விழி நீரில் நனைகிறதே
வேஷங்கள் தான் நிஜமென்றால்
பாசங்கள் பொய்யாவது இயல்பே
காலங்கள் கரைந்தோடலாம்
தூரங்கள் பெரிதாகலாம்
பாரங்கள் சுமையாகலாம் உன்
பாசம் மட்டும் நிறம் மாறலாமா..(தனா)

No comments:
Post a Comment