&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Monday 6 June 2011

உன் வருங்காலம்

உன்னை அறியாமல்
நீ செய்த தப்புக்களுக்கு
சூழ்நிலை மேல் பழி போடலாம்
ஆனால் நீ அறிந்து செய்யும்
தப்புக்கள் அவை உன் ஆழ்மனதின்
ஆசைகளே அவைகளுக்கு
சூழ்நிலைமேல் மட்டுமல்ல
சூழ்ச்சியாளர்மேல் கூட
பழிபோட முடியாது
அவைகளுக்கான் பதிலை
நீயே தான்சொல்ல வேண்டும்
நீ பயிரிடும் தப்புக்களை
பாவங்களாக தான் அறுவடை செய்வாய்
உனக்கான வலிகளுக்கு நீயே உரமூட்டாதே
உண்மைகளை உணர்ந்துகொண்டு
உனக்கான வாழ்க்கையை வாழப்பழகு
உன் வருங்காலம் என்றும் வசந்தகாலம் தான்..(தனா)

1 comment:

  1. நல்ல கவிதை

    வாழ்ததுக்கள்

    ReplyDelete