&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Monday 6 June 2011

இமைக்க மறந்த ஈரவிழிகள்

நுனிப்புல்லின் செருக்கோடு
புயல் காற்றிற்கு கூட வளைந்திடாத
என் மனது இன்று உன் சிறு
மூச்சுக்காற்றில் நாணலாய் வளைந்து
நடைப்பிணமாய் அலைக்கழிந்து
உன் அன்புத் தூறலில் நனைந்து
உன் வெறுப்பு மழையில் குளித்து
இறுக்கிப்பிடிக்கும் என் இதயத்துடிப்பை
இரும்பின் கனமாக உணர்ந்தபடி
நாளை என்பதை உன் கையில் கொடுத்துவிட்டு
இன்று என்பதை இழந்துகொண்டிருக்கின்றேன்
இமைக்க மறந்த ஈரவிழிகளோடு.......(தனா)

No comments:

Post a Comment