என்னவனே!!!
உன் பார்வையின் ஒளிவீச்சில்
என் இதயம் பதைபதைக்கின்றது
உச்சரிக்கும் வார்த்தைகளெல்லாம்
உருமாறி விழுவது தெரியாமல்
உதடுகள் வார்த்தைகளை உதிர்க்கின்றது
உன்னிடம் நான் கேட்க நினைத்த
கேள்விகளெல்லாம் ஏனோ
எனக்குள்ளே ஒளிந்துகொள்ள
உனக்கான என் பதில்கள் மட்டும்
உன் கேள்விக்காக தவமிருக்கின்றன..(தனா)
No comments:
Post a Comment