&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Monday 6 June 2011

என் எண்ணக்கரு

மீண்டும் நாளை பேசுவோம் என
நீ சொல்லும் வார்த்தை கேட்டு
தினமும் மூழ்கடித்துக் கொள்கின்றேன்
என் இன்றைய மீதிப்பொழுதுகளை
நாளை என்பது யுகமாய் தோன்றுவதால்
இன்றைய பொழுதுகளுக்கு
இறக்கை கட்டிவிட்டு
என் பிரியம் இன்றியே என்னிடம்
நீ பெற்ற பிரியாவிடைக்கு
பிரிவைக் கொடுக்க எண்ணி
பிரிந்து கொண்டிருக்கின்றேன்
இன்றைய பொழுதுகளை
இவைகளை ஏக்கத்துடன் எழுதவில்லை
என் எண்ணக்கருவில் இருந்து
எழுதுகிறேன் எழுத்துக்காக.....(தனா).

No comments:

Post a Comment